அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இன்று(25.07.2024) நடைபெற்றது. அருகில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரச முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலாய சுவாமிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., கூடுதல் ஆணையர்கள் திருமதி ஹரிபிரியா, திரு.சுகுமார் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment