திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.60,000 மதிப்பீட்டிலும், சிறுபான்மையினருக்கான சிறுதொழில் உதவி திட்டத்தில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பீட்டிலான காதொலி கருவி, என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.10.64 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment