திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு ரூ.25,000 அபராதம் தாலுகா போலீசார் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 10 June 2024

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு ரூ.25,000 அபராதம் தாலுகா போலீசார் நடவடிக்கை

 


திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு ரூ.25,000 அபராதம்  தாலுகா போலீசார் நடவடிக்கை 


திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததை அடுத்து போலீசார் சிறுவனின் தந்தையை வரவழைத்து வழக்கு பதிவு செய்து ரூ.25000 அபராதம் வித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தெரிவித்ததாவது 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad