தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தேய்பிறை அஷ்டமியான இன்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.இதில் வெகு தொலைவில் உள்ள வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment