நத்தம் கோவில்பட்டி ஶ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 5 February 2024

நத்தம் கோவில்பட்டி ஶ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா.


திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் கோவில்பட்டி ஶ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை  நடந்தது. இதற்கு நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜோசப் ஜெயபால் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவரையும் அறக்கட்டளை உறுப்பினர் ராஜ்குமார் வரவேற்றார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் சத்யா வாசித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப இணை பேராசிரியர் தேவராஜ் கலந்து கொண்டு பேசினார். 

தொடர்ந்து மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் அறக்கட்டளை  உறுப்பினர்கள், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மலையாளத்து கருப்பு கோவியில் திருவிழா - தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் பிப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது.


நத்தம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள மலையாளத்து கருப்பு மந்தையம்மன் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை  அழகர்கோவில் மலையிலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து நத்தம்சந்தன கருப்பு கோவிலில் இருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக கோயிலை சென்றடைந்து. அதைத்தொடர்ந்து, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad