தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்:
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதராக சிந்து என்ற திருநங்கை நேற்று பதவியேற்றுள்ளார்.
இதுவரையில் தெற்கு ரயில்வே துறையில் ஆண்கள் அதிகமாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சிந்து என்ற திருநங்கை மேலும் இவருடைய பணி சிறக்க தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக் கூறி உள்ளனர், மேலும் இவருக்கு கிடைத்த இப் பணி திருநங்கைகள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment