திண்டுக்கல்லில் ஒரு சில ரேஷன் கடையில் பத்து ரூபாய் மாமூல் கேட்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மக்கள் வேதனை:
திண்டுக்கல்லில் ஒரு சில ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டு வரும் வேஷ்டி சேலைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மக்களிடமிருந்து ஒரு நபருக்கு பத்து ரூபாய் வாங்குவதாக புகார் எழும்பியுள்ளது மேலும் 10 ரூபாய் கண்டிப்பாக வேஷ்டி சேலைகளுக்கு தர வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாகவும் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் கொண்டு உடனடியாக இது போன்ற விஷயங்கள் இனி நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment