பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவதி:
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம் உள்ளிட்டவைகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டது. விடுபட்டவர்கள் அனைவரும் இன்று பெற்றுக் கொள்ளலாம்என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நியாய விலை கடைகளில் பணம் மற்றும் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான மிஷினில் பரிவர்த்தனை நீக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசு தொகுப்பு பெறாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் அவதி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பரிசு தொகுப்பு பெறாதவர்கள் இன்று பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்
No comments:
Post a Comment