வத்தலகுண்டு அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 80-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டியில் பெரியமாடு , நடு மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என 4 வகையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment