திண்டுக்கல்லில் மருத்துவர் வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது 7 பவுன் நகை மீட்பு
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் கமலா வீட்டில் 7 பவுன் தங்க நகை திருடு போனது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சிபின் மேற்பார்வையில் மேற்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துமணி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மருத்துவர் கமலா வீட்டில் பணியாளராக வேலை பார்த்த அனிதா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட 7 பவுன் தங்க நகையை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment