திண்டுக்கல் மாவட்டம்பெரிய கோட்டை ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டியில் கேட் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை 60,000 லிட்டர் கொள்ளளவு தொட்டி தண்ணீர் வீணடிப்பு
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பெரிய கோட்டை ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டி 6வது வார்டு பகுதியில் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் திறந்து விடக்கூடிய கேட் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அதனை சரி செய்துள்ளனர். பின்னர் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் தொட்டியில் இருந்த 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் தற்பொழுது திறந்து விடப்பட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் பல ஊர்களிலும் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குடிநீரை வீணடிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment