சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு மற்றும் புலிக்குத்திக்காடு ஆகிய கிராமங்களுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள் சிறுவாட்டுக்காடு பழங்குடியினர் மக்களுக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு மேம்பாடு பணிகள் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அமைச்சர்என்.கயல்விழி செல்வராஜ் அடிக்கல்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சியில், சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு மற்றும் புலிக்குத்திக்காடு ஆகிய கிராமங்களுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறுவாட்டுக்காடு பழங்குடியினர் மக்களுக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு பணிகளை இன்று(14.01.2024) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள். அருகில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. பூங்கொடி அவர்கள்,ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.அய்யம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, உதவிப்பொறியாளர் திரு.கணேசன், வடகாடு ஊராட்சி மன்ற திருமதி தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment