திண்டுக்கல் நகரில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களில் குவிந்த 300 டன் குப்பை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
திண்டுக்கல் நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரோட்டோரங்களில் கரும்பு,மஞ்சள் போன்ற பொருட்களை விற்ற வியாபாரிகள் கழிவுகளை அப்படியே விட்டு சென்றனர். இதுமட்டுமின்றி 48 வார்டுகளிலும் பொது மக்கள் பொங்கலின் போது பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளும் குவிந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் 400 துாய்மை பணியாளர்கள் மூலம் ஜன.15 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் ரோட்டோரங்கள்,
நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கிய 300 டன் குப்பைகளை டிராக்டர்,மினிலாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் மூலம் அகற்றி உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment