வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பங்கு பணம் பிரிப்பதில் மோதல் 2 பேர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் - கரூர் நெடுஞ்சாலையில் உள்ள மினுக்கம்பட்டியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் வசூல் செய்வது தொடர்கிறது. இந்நிலையில் வசூல் பணத்தை பிரிப்பதில் டிரைவர் குருமூர்த்திக்கும், காவலர் அருளப்பன் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. காயமடைந்த காவலர் அருளப்பன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி.துர்காதேவி விசாரணை நடத்தி எஸ்.பி.பிரதீப்க்கு அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் இரண்டு பேரையும் பணியிட நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment