திண்டுக்கல்லில் சுவாமி விவேகானந்தரின் 161 ஆவது ஜெயந்தி விழா இரத பவனி மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திண்டுக்கல்நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோவில் முன்பு விவேகானந்தர் பேரவை சார்பாக சுவாமி விவேகானந்தரின் 161 ஆவது ஜெயந்தி விழா இரத பவனியை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இரத பவனி முன்பு மாணவ, மாணவிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி, அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் சண்முகவேல், அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் மலைச்சாமி வெள்ளை விநாயகர் கோவில் திருக்கோயில் அறங்காவலர் பொன் சக்தி, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே மோகன், சேகர் பவுல்ராஜ்,ராஜா, பிச்சை சேர்வை, ஜோதிடர் சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி மற்றும் விவேகானந்தர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இரத ஊர்வலம் வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து ஆரம்பித்து நான்கு இரத வீதியில் சுற்றி இறுதியில் மணிக்கூண்டில் நிறைவுற்றது. விழாவிற்கு வந்த சமூக நலனில் அக்கறை கொண்டோர் அனைவருக்கும் விவேகானந்தர் பேரவையின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment