திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்ப்பு கூலித்தொழிலாளி கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 6 December 2023

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்ப்பு கூலித்தொழிலாளி கைது

 


திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்ப்பு கூலித்தொழிலாளி கைது 



திண்டுக்கல் நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி(40). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி, தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் உள்ளிட்டோர் சின்னச்சாமி வீட்டுப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது சின்னச்சாமி வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரிய வந்ததை அடுத்து சின்னசாமியை போலீசார் கைது செய்து வீட்டின் பின்புறம் வளர்த்த 2 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad