திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 6 December 2023

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு


 திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம்  திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு



திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல் பார்த்தசாரதி(32) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கிற்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று போக்சோ வழக்கிற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பார்த்தசாரதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad