திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சியில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைப்பதற்கு அடிக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நாட்டினார்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியில், ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, ரூ.83.70 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(04.12.2023) திறந்து வைத்தார். அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி. பரமேஸ்வரி முருகேசன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி இரா.மனோரஞ்சிதம், வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவர் திரு.ப.சிதம்பரம், துணைத்தலைவர் திரு.இரா.தர்மலிங்கம், உதவி செயற்பொறியாளர் திருமதி வீ.வெற்றிச்செல்வி, செயல் அலுவலர் திரு.தி.ராஜேந்திரன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment