திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதம்
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்டீபன்ராஜ்(25) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் எஸ்.பி. பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், ஸ்டீபன் ராஜுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment