திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 28 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 17 October 2023

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 28 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

 


திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 28 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு



திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் 15 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரவுண்டுரோடு புதூர், நாகல்புதூர், சாமியார்தோட்டம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.



ஏற்கனவே சொத்துவரி நிலுவையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் சலுகையும், செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எச்சரித்து மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad