திண்டுக்கல்லில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 8 September 2023

திண்டுக்கல்லில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம்.

 


திண்டுக்கல்லில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம்.


பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்/ வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை 9.9.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.



இந்த முகாம்களில்     குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரியும், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் ஆகியவை தொடர்பாக மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு  மேற்காணும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad