திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் பைக் விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீதத்திற்குமேல் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பைக் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் வருகிற 14.09.23 மற்றும் 15.09.23 ஆகிய இரு தினங்கள் காலை 10.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 60 சதவீதத்திற்குமேல் உள்ள ஒரு கால் மற்றும் இரண்டு கால் பாதிக்கப்பட்ட மோட்டார் பைக் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும்.
60 சதவீதமும் அதற்கு மேலும் ஊனம் அடைந்திருக்க வேண்டும். இடுப்புக்கு மேல் இரண்டு கைகளும், உடலும் நன்றாக செயல்பட வேண்டும். 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment