திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம்.
திண்டுக்கல் ஒன்றியம், சென்னமநாயக்கன்பட்டி அருகே பாறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி, குற்றவாளி சரவணகுமாருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment