திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணின் 5 பவுன் தங்க செயின் பறித்த 2 பேர் கைது:
திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடியை சேர்ந்த லட்சுமி(45) இவர் கார் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர் இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் சித்திக், நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நகர் மேற்கு காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் தர்மர், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணன், காவலர் ரமேஷ் ஆகியோர் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரைவீரன், மதுசூதன்ஐயப்பன், ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.
No comments:
Post a Comment