திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறை சார்பில் கண்காட்சி இடம்பெற்றிருந்தது. கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெடல் அணிவித்து, பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும் மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இவ்விழாவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் பூஜா குல்கர்னி,
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment