வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் புரட்டாசி பௌர்ணமியை விழா. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 29 September 2023

வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் புரட்டாசி பௌர்ணமியை விழா.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி அடுத்துள்ள சின்னாம்பட்டியில் உள்ள வரசித்தி வாராகி அம்மன்  புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை வெள்ளிகிழமை காலை துவங்கி சிறப்பு அபிஷேகம் ஆராதனையோடு யாக பூஜையும் ஆன்மீகப் பெரியோர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த பூஜையில் அலங்கரிக்கப்பட்ட கலசத்தில் வரசித்தி வாராகி அன்னையை பூஜித்து சிறப்பு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.


அக்கினியில் அஸ்வாரூடா வராகி ரூபமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் ஆசிர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அம்பாளின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதற்கு பின்னால் அனைத்து பக்தர்களுக்கும் வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 


இந்த விழாவினை திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி அம்மன் பக்தர்களும் திண்டுக்கல் வாராகி அறக்கட்டளையின் தலைவர் சஞ்சீவி சாமிகளும் கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad