திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் 8 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து, ரூ.4.37 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் (அபிராமி அம்மன்) திருக்கோயிலில் அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடத்தி வைத்தார். பின்னர் இதையடுத்து 4 கிராம் தங்கத்தாலி உட்பட கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பில்
சீர் வரிசைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்
மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், இராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment