முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.
திண்டுக்கல் ஒன்றியம் ஏ.வெள்ளோடு அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஏஞ்சல்ராஜ்(30). இவர் தனது முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து NCMEC மையத்திலிருந்து புகார் அளித்தனர். புகாரின் பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏஞ்சல் ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஏஞ்சல்ராஜ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment