திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 6 அடி நீள சாரை பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி, கோழிப்பண்ணை தெரு பகுதியில் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று நடமாட்டம் கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அந்த ஆறடி நீள சாரை பாம்பை உயிருடன் பிடித்து கொண்டு சென்றனர். மழை காலங்களில் இது போன்று மக்கள் நடமாடும் பகுதிகளில் சில நேரம் பாம்புகள் புகுந்து விடுவது வழக்கம்.
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்துகள், சாலை விபத்துக்களில் மீட்பு பணி, இயற்கை சீற்ற பாதிப்புகளில் சிக்கியோரை மீட்பு, வீடுகள், குடியிருப்புகள், அலுவங்கங்கள், தொழில் நிறுவனங்களில் பாம்புகள் புகுந்தால் பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இது போன்ற நேரங்களில் அவர்களை அழைக்கும் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment