ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 18 July 2023

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது


ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக மிரட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த ஆலயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன்(24) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கானது திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று 18.7.2023 கார்த்திகேயனுக்கு 20 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad