திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (வாழ்ந்து காட்டுவோம்) திட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு, நுண் நிறுவன கடன் மற்றும் இணை மானிய நிதி கடன் 20 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று வழங்கினார் தமிழகத்தில் ஊரகத் தொழில்களை ஊக்குவிக்கவும் கிராமப்புற மக்களின் வருவாய்கள் அதிகரிக்கவும் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது இத்திட்டத்தில் ஆத்தூர் வத்தலகுண்டு கொடைக்கானல் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் பழனி குஜிலியம்பாறை ஆகிய 7 வட்டாரங்களில் உள்ள 148 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல் படுத்தப் பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் இன்று 20 பயனாளிகளுக்கு சுமார் 19.85 லட்சம் மதிப்புள்ள காசோலைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ்.கார்த்திகேயன்.
No comments:
Post a Comment