திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னை நகர் தெரு நாய்களின் தொல்லை குடியிருப்பு வாசிகள் அவதி:
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அன்னை நகர் குடியிருப்பு உள்ளது இக்குடியிருப்புகளில் அதிகமான தெரு நாய்கள் உள்ளதாகவும் இத்தெருவில் விளையாடும் குழந்தைகளை தெரு நாய்கள் விரட்டி கடிக்க முற்படுவதாகவும் இரவில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை தெரு நாய்கள் விரட்டுவதாகவும் மேலும் இத்தெருவுக்கு புதிதாக வரக்கூடியவர்கள் நாய்களிடம் கடிபடுவதாகவும் மேலும் தெரு நாய்களின் அச்சத்தால் குழந்தைகள் தங்களது இல்லத்தின் மாடியில் விளையாடுவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையாக தெரிவித்தனர் மேலும் மேட்டுப்பட்டி அன்னை நகர் குடியிருப்பு வாசிகள் இது சம்பந்தமான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment