திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 9 July 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றம்.


 திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றம்.


திண்டுக்கல்லில் பொது கலந்தாய்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


கிழக்கு வட்டம்-


அதன்படி திண்டுக்கல் வேம்பார்பட்டியில் பணிபுரிந்த செந்தில் பிரபு கணவாய் பட்டிக்கும், அஞ்சு குழிப்பட்டியில் பணிபுரிந்த மகேஸ்வரன் தாமரைப்பாடிக்கும், வெள்ளோட்டில் பணிபுரிந்த ரிச்சர்டு ஆரோக்கியசாமி திம்மணநல்லூருக்கும், ராகலா புரத்தில் பணிபுரிந்த சசிகலா ராணி அஞ்சுகுழிபட்டிக்கும், தோட்டனூத்தில் பணிபுரிந்த திருமலை ராஜ் பெரியகோட்டைக்கும், சிறுமலையில் பணிபுரிந்த வசந்தகுமார் ராஜக்காபட்டிக்கும், சாணார்பட்டியில் பணிபுரிந்த சொர்ணலதா ராகலாபுரத்திற்கும், பெரிய கோட்டையில் பணிபுரிந்த சிவ பிரதாப் சிறுமலைக்கும், ராஜக்காபட்டியில் பணிபுரிந்த சுப்புராஜ் வேம்பார்பட்டிக்கும், கணவாய்பட்டி கிராமத்தில் பணிபுரிந்த பிரவீன் குமார் பாலகிருஷ்ணாபுரத்திற்கும், அடியனூத்தில் பணிபுரிந்த திருவருட்செல்வன் வெள்ளோட்டிற்கும், பாலகிருஷ்ணாபுரத்தில் பணிபுரிந்த அரவிந்த் தோட்டனூத்திற்கும், தாமரைபாடியில் பணிபுரிந்த அழகு ராணி சாணார்பட்டிக்கும், எமக்கலாபுரத்தில் பணிபுரிந்த முருகானந்தம் அடியனூத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


மேற்கு வட்டம்-


திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் சிரங்காடு கிராமத்தில் பணிபுரிந்த செந்தில்குமார் தெத்துப்பட்டிக்கும், அகரம் கிராமத்தில் பணிபுரிந்த ராமர் ஆடலூர் கிராமத்திற்கும், புதுக்கோட்டை கிராமத்தில் பணிபுரிந்த சிவ செல்வி கொத்தப்புள்ளி கிராமத்திற்கும், ஆடலூர் கிராமத்தில் பணிபுரிந்த செந்தில் தாசன் புதுக்கோட்டை கிராமத்திற்கும், தெற்குப்பட்டி கிராமத்தில் பணிபுரிந்த அசோக் குமார் பன்றிமலை கிராமத்திற்கும், கொத்தப்புள்ளி கிராமத்தில் பணிபுரிந்த ஹெலன் ரூபி சிரங்காடு கிராமத்திற்கும், பன்றிமலை கிராமத்தில் பணிபுரிந்த அருண்பாண்டியன் அகரம் கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


நத்தம் வட்டம்-


நத்தம் வட்டத்தில் செல்லப்ப நாயக்கன்பட்டியில் பணிபுரிந்த சுப்புலட்சுமி நத்தத்திற்கும், நடுமண்டலம் கிராமத்தில் பணிபுரிந்த முருகன் முளையூருக்கும், முளையூரில் பணிபுரிந்த சுரேஷ் பாப்பபட்டிக்கும், குடகிபட்டி கிராமத்தில் பணிபுரிந்த மணிகண்டன் வேலம்பட்டிக்கும், வேலம்பட்டியில் பணிபுரிந்த சரவணன் செல்லப்ப நாயக்கன்பட்டிக்கும், நத்தத்தில் பணிபுரிந்த சிவக்குமார் நடுமண்டலத்திற்கும், பூதகுடியில் பணிபுரிந்த சதீஷ்குமார் குடகிபட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


நிலக்கோட்டை வட்டம்-


பச்ச மலையான் கோட்டையில் பணிபுரிந்த கலா நிலக்கோட்டைக்கும், பள்ளப்பட்டியில் பணிபுரிந்த சத்தியா ஒருத்தப்பட்டுக்கும், நிலக்கோட்டையில் பணிபுரிந்த மணிகண்டன் எத்திலோடுக்கும், ராமராஜபுரத்தில் பணிபுரிந்த செந்தில் கண்ணன் கணவாய் பட்டிக்கும், மல்லணம்பட்டியில் பணிபுரிந்த கனி பள்ளபட்டிக்கும், நக்கலூத்தில் பணிபுரிந்த அனிதா செங்கட்டாம்பட்டிக்கும், நூத்துலாபுரத்தில் பணிபுரிந்த ராமமூர்த்தி பச்சமலையான் கோட்டைக்கும், கணவாய்பட்டியில் பணிபுரிந்த மகேஸ்வரன் நூத்துலா புரத்திற்கும், எத்திலோட்டில் பணிபுரிந்த பாலமுருகன் மல்லணம்பட்டிக்கும், செங்கட்டாம்பட்டியில் பணிபுரிந்த முத்துப்பாண்டி நக்கலூத்து கிராமத்திற்கும், சேவுகம்பட்டியில் பணிபுரிந்த ஜமுனா குன்னுவாரன்கோட்டைக்கும், குன்னுவாரன் கோட்டையில் பணி புரிந்த மாணிக்கமுத்து சேவுகம்பட்டிக்கும், சிவஞானபுரத்தில் பணிபுரிந்த பிரகாஷ் குமார் வத்தலகுண்டுக்கும், ஒருத்தட்டு கிராமத்தில் பணிபுரிந்த சுகன்யா சிவஞானபுரத்திற்கும், வத்தலக்குண்டில் பணிபுரிந்த செல்வ கணபதி ராமராஜபுரத்திற்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


ஆத்தூர் வட்டம்-


ஆத்தூர் வட்டத்தில் சீவல்சரகு கிராமத்தில் பணிபுரிந்த சாகிராபானு கீழக்கோட்டைக்கும், கீழக்கோட்டையில் பணிபுரிந்த விஜயலட்சுமி சீவல் சரகு கிராமத்திற்கும், பாளையங்கோட்டையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் அம்பாத்துரை கிராமத்திற்கும், ஆத்தூரில் பணிபுரிந்த சரவணன் முன்னிலைக் கோட்டைக்கும், அம்பாத்துறையில் பணிபுரிந்த ராஜலட்சுமி பாளையங்கோட்டைக்கும், முன்னிலை கோட்டையில் பணிபுரிந்த கார்த்திகா ஆத்தூர் கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad