திண்டுக்கல் காய்கறி சந்தையில், தக்காளி கிலோ ரூபாய் 60-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், தக்காளியை வாங்க சந்தையில், வாடிக்கையாளர் ஆர்வம் குறைந்து வருகிறது. திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூபாய் 60க்கு தக்காளி விற்கப்பட்டாலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.
இன்று மொத்த விலையில் ஒரு தக்காளி முதல் ரகம் 140க்கும், இரண்டாம் ரகம் 30க்கும், மூன்றாவது ரகம் 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 வரை விற்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மார்க்கெட் செல்ல முடியாததால் சில்லறை கடைகளில் அதிக விலை கொடுத்து, தாக்காளி வாங்குகின்றனர். இதனால், ரேஷன் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு, தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நியாய விலைக் கடைகளில், கூடுதலாக தக்காளி அளவை அதிகப்படுத்தி விற்பனை செய்ய கோரிக்கை வலுத்து வருகிறதாம்.



No comments:
Post a Comment