திண்டுக்கல் மேற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 113 பேரிடம் 6 கோடி மோசடி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி திண்டுக்கல் மதுரை தென்காசி விருதுநகர் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 113 பேரிடம்6 கோடி வரையிலும் மோசடி செய்த பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனைவி மல்லீஸ்வரி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் தங்கராசா இருவர் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு புகார் கொடுத்தனர் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரவேல் ராஜசேகரன் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரி ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்தமிழ்செல்வி ராஜகோபால் மற்றும் காவலர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர் மல்லீஸ்வரி தங்க ராஜா இருவரும் தாராபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்துதிண்டுக்கல் குற்றப்பிரிவு நீதிமன்றம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் கார்த்திகேயன்..
No comments:
Post a Comment