வேடசந்தூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது 12 டூவீலர்கள் 2 சொகுசு கார் பறிமுதல் - வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வேடசந்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடாங்கிபட்டி பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து சிலர் தப்பியோடி விட்டனர். மேலும் போலீசார் 10பேரை கைது செய்து மேலும் 12 டூவீலர்கள் 2 கார் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 சேவல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment