திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 July 2023

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது


 திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது, 5 1/2 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள், 4 செல்போன்கள் பறிமுதல் - எஸ்பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை.


திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்பி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கோகிலா, ஷேக்பரீத், டேவிட் பாக்கியராஜ், முருகேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 1/2 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad