திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 31 July 2023

திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது.


திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது.


திண்டுக்கல்லில் நகர் தெற்கு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒத்தக்கண் பாலம் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பின்பக்க இருக்கைக்கு அடியில் இருந்த ஒரு பையில்  1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நாகல்நகரை சேர்ந்த மதன்குமார்-32, ஒத்தக்கண்பாலம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ்-24, தோட்டனூத்தை அடுத்த மேட்டூர் காலனியை சேர்ந்த அஜித்குமார்-22 ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad