நெல்சன் வயது 35. மாற்றுத்திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராகவும் வயதான தனது தாயை பராமரிப்பவராகவும் இருந்து வருகிறார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 1 July 2023

நெல்சன் வயது 35. மாற்றுத்திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராகவும் வயதான தனது தாயை பராமரிப்பவராகவும் இருந்து வருகிறார்


வேடசந்தூர் எஸ்ஏபி நகரை சேர்ந்தவர் நெல்சன் வயது 35. மாற்றுத்திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராகவும் வயதான தனது தாயை பராமரிப்பவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் நகரில் குளக்கரையில் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் நபர்களுக்கும் எஸ் ஏ பி நகரில் இடம் வாங்கி பட்டா வைத்திருக்கும் நபருக்கும்  பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்ஜிஆர் நகரை சேர்ந்த  பிரபாகரன்(23)  சந்ததோஷ் (22)  ஆகாஷ் (20) ஆகிய மூன்று இளைஞர்களும் எஸ்ஏபி நகரில் குடியிருக்கும் நெல்சனின் வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதில் தலையிலும் முகத்திலும் பலத்த காயம் அடைந்த நெல்சன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்சனை தாக்கிய மூன்று இளைஞர்களும் அடுத்த தெருவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் பாண்டி (55) என்பவர் வீட்டிற்கு சென்று கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் கேட்டை உடைத்து கலாட்டா செய்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் தட்டி கேட்ட பொழுது நெல்சனை தாக்கியது போன்று உன்னையும் தாக்குவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக பாண்டி தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரிலும் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து மூன்று இளைஞர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் எம்ஜிஆர் நகர், எஸ்ஏபி நகர், யூசுப்நகர் பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad