ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாநகராட்சி 3 இடங்களில் மொத்தம் ரூ.74.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 10 July 2023

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாநகராட்சி 3 இடங்களில் மொத்தம் ரூ.74.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்...


 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாநகராட்சி  3 இடங்களில் மொத்தம் ரூ.74.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 


திண்டுக்கல் மாநகராட்சியில் துாய்மை இந்தியா இயக்கம் 2021-2022 திட்டத்தில் 5-வது வார்டு மருதாணிகுளம், 40-வது வார்டு பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் 24-வது வார்டு முத்தழகுப்பட்டி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.24.96 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.74.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மேலும் 

பொதுமக்கள் சுகாதார வளாகங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மண்டல தலைவர்கள் பிலால் ஹூசைன், ஆனந்த், ஜான்பீட்டர், மாமன்ற உறுப்பினர்கள்  ஹசினா பர்வீன்,  சுவாதி,  ஸ்டெல்லாமேரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad