கரவை மாடு திருட்டு... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 29 June 2023

கரவை மாடு திருட்டு...


திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதியில்25000 மதிப்புள்ள கரவை மாடு திருட்டு


திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா சித்தையன்  கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகபு நிஷா  வயது 50 இவர் கணவனை இழந்த நிலையில் இரண்டு கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்று விட்டு அப்பகுதிக்கு உட்பட்ட   அரசு மருத்துவமனை அருகில் மரத்தில் மாடினை கட்டி வைத்துவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீடு சென்று மீண்டும் மதியம் 12 மணி அளவில் திரும்பி கட்டிப்போட்ட   மாடுகளை பார்ப்பதற்காக வந்துள்ளார் கட்டிப்போட்ட இரண்டு மாட்டில் ஒரு கறவை மாடு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட செம்பட்டி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.                             


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்   தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad