பள்ளிகளில், கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 3 June 2023

பள்ளிகளில், கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.


கோடைவிடுமுறை முடிந்து 7-ந்தேதி திறக்கப்பட இருப்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

பூட்டி கிடக்கும் வகுப்பறைகளில் மலேரியா, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கலாம். அதன்மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ-மாணவிகளை கொசுக்கள் கடித்து தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி வகுப்பறைகளை திறந்து கொசுக்களை அழிக்கும் வகையில், கொசுமருந்து அடிக்கும் பணி நடக்கிறது.


திண்டுக்கல் மாநகராட்சியில், உள்ள பள்ளிகளில் கொசுமருந்து அடிப்பதற்கு ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியர் பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணியை தொடங்கினர். 

No comments:

Post a Comment

Post Top Ad