சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 5 பவுன் நகையை பெற்று மோசடி செய்த சட்டம் படிக்கும் வாலிபர் போக்சோவில் கைது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மேலும் சிறுமியிடம் நயவஞ்சகமாக பேசி 5 பவுன் தங்க நகை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, சின்னாளப்பட்டி முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அல்பாசித்(22) என்பவரை
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அல்பாசித் கேரளா மாநிலத்தில் சட்டம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment