போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 22 June 2023

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை...


போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021- ம் ஆண்டு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி குணா(22) என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார், குணாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குணாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad