கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 19 June 2023

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை,


திண்டுக்கல் பெரியபொன்னுமாந்துறை பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.5,000 அபராதம்.


திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி ஜான் கென்னடி(28), சேசுராஜ்(32) ஆகிய 2 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வின்சென்ட் செல்வராஜ்(54), வில்லியம் ரெசாரியோ (35) ஆகியோரை தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக  அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக, திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி,  அந்தோணிசாமி ஜான் கென்னடி மற்றும் சேசுராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad