பழனியில் ஓட ஓட விரட்டி வெட்டி ஒருவர் கொலை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 3 May 2023

பழனியில் ஓட ஓட விரட்டி வெட்டி ஒருவர் கொலை...


 பழனியில் ஓட ஓட விரட்டி வெட்டி ஒருவர் கொலை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் குறும்பபட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வடிவேலு (வயது 27). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது அடிதடி, தகராறு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) மதியம் பழனி பஸ்நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென வடிவேலுவை அரிவாளால் வெட்டினர். இதில் உயிருக்கு பயந்து  வடிவேலு ஓட ஆரம்பித்தார். விடாமல் ஓட ஓட துரத்தி வடிவேலுவை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad