வேடபட்டி பூண்டு வியாபாரி கொலை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 May 2023

வேடபட்டி பூண்டு வியாபாரி கொலை...



வேடபட்டி பூண்டு வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.


திண்டுக்கல் அருகே வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி. இவர் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னு (எ) விக்னேஷ், பானை(எ)மகேந்திரன், யுவராஜ் குமார் ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விசாகன், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும்  மதுரை மத்திய சிறையில் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad