கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 6 May 2023

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

 


பட்டிவீரன்பட்டி பகுதியில் 64 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி தேதி 64 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரையை சேர்ந்த அழகுபாண்டி (28), பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (28) உட்பட 8 பேரை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேர்களில் முதற்கட்டமாக அழகுபாண்டி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விசாகன், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad