எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதிய பள்ளி மாணவ மாணவிகள்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 7 April 2023

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதிய பள்ளி மாணவ மாணவிகள்...



 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 119 மையங்களில் 24 ஆயிரத்து 564 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். 1,208 பேர் தேர்வு எழுத வரவில்லை.


திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

தேர்வு எழுதுவதற்காக பழனி கல்வி மாவட்டத்தில் 51 மையங்கள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 68 மையங்கள் என மொத்தம் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை மொத்தம் 24 ஆயிரத்து 564 மாணவ, மாணவிகள் எழுதினர். பழனி கல்வி மாவட்டத்தில் 536 மாணவ-மாணவிகள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 672 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1,208 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad