நீதிபதி நாக்கை அறுப்பேன் என்று பேசிய மாநகர மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 7 April 2023

நீதிபதி நாக்கை அறுப்பேன் என்று பேசிய மாநகர மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு...


 திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிபதி நாக்கை அறுப்பேன் என்று பேசிய மாநகர மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு.


திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் SC/ST பிரிவு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 

திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசும்போது:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad